நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஈரானில் வெள்ளம்: 21 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, 3 பேர் மாயம்

ஈரானில் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூவர் மாயமாகியுள்ளனர். 

News image
Updated On :23 ஜூலை 2022, 11:02 am

ஈரானில் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூவர் மாயமாகியுள்ளனர். 

பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்துவந்த ஈரானில் திடீர் பருவநிலை மாற்றத்தால் கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 89 பேரை மீட்புக் குழுவினர் இதுவரை மீட்டுள்ளனர். மேலும் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

கனமழையால் எஸ்தாபான் நகரின் ரோட்பால் அணையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நிவாரணப் படைகள் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டதாக மாகாண அதிகாரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.