'அக்னிபத்': மோடி ஆய்வகத்தில் புதிய பரிசோதனை -ராகுல் காந்தி
அக்னிபத் திட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வகத்தில் புதிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ஆண்டுதோறும் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். ஆனால் அவர்களில் 3 ஆயிரம் பேர் மட்டுமே அரசு வேலைகளைப் பெறுகிறார்கள்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் நான்கு ஆண்டுகள் கழித்து என்னவாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த புதிய பரிசோதனை மூலம் நாட்டின் பாதுகாப்பும், இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்துக்குள்ளாகும் என விமர்சித்துள்ளார்.
60,000 सैनिक हर साल रिटायर होते हैं, उनमें से सिर्फ 3000 को सरकारी नौकरी मिल रही है।
4 साल के ठेके पर हज़ारों की संख्या में रिटायर होने वाले अग्निवीरों का भविष्य क्या होगा?
प्रधानमंत्री की प्रयोगशाला के इस नए Experiment से देश की सुरक्षा और युवाओं का भविष्य दोनों खतरे में हैं।
அக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்தில் பணியாற்ற 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் கிழ் ஆள்சேர்ப்பு நடைபெற்று வந்தாலும், பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.