தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

ஜார்க்கண்டில் 16 வயது பெண் கடத்தல்; 3 மாதங்களாக கூட்டு  பாலியல் பலாத்காரம்

16 வயது பெண் கடத்தப்பட்டு, பூட்டிய அறைக்குள் மூன்று பேரால் கடந்த 3 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஜார்க்கண்டில் 16 வயது பெண் கடத்தல்; 3 மாதங்களாக கூட்டு  பாலியல் பலாத்காரம்

Updated On :26 ஜூலை 2022, 8:21 am IST


பொகாரோ: பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வந்த 16 வயது பெண் கடத்தப்பட்டு, பூட்டிய அறைக்குள் மூன்று பேரால் கடந்த 3 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் மந்தோஷ், விஷ்ணு குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இவர்கள் யாரையும் தனக்குத் தெரியாது என்று அப்பெண் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி, மாணவி காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து தொடர்ந்து தேடும் பணியையும் நடத்தியுள்ளனர். 

காவல்துறையினர் இதில் பெரிய ஆர்வம் காட்டாமல், மாணவியே திரும்பி வருவார் அது வரை காத்திருக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை டிஎஸ்பி கூறுகையில், பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட பிறகு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெண்ணின் பெற்றோர் கூறுகையில், ஏப்ரல் 19ஆம் தேதி கடைக்குச் சென்ற பெண்ணை மூன்று பேர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதியிலிருந்த வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர்.

மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்ததும், அவர்கள் வெளியே செல்லும் போது பெண்ணின் வாய் மற்றும் கையை துணியால் கட்டிவிட்டுச் சென்றுள்ளனர். ஜூலை 19ஆம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் இதனை கவனித்து வந்து, வீட்டைத் திறந்து பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

பாதிக்கப்பட்டப் பெண் அங்கிருந்து தப்பி, பெற்றோரிடம் வந்துள்ளார். உடனடியாக அவர்கள் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.