நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை: மத்திய அரசு

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஜூலை 2022, 10:09 am IST

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் 5.25 லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை 1,600 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மார்ச் 2020 முதல் கரோனால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் எண்ணிக்கையை அளிக்குமாறு மாநிலங்களவை உறுப்பினர் அபிர் ரஞ்சன்தாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த சுகாதாரத்துறை இணையமைச்சர், “கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் தனிப்பட்ட எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லை. ஜூலை 23 வரை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 5,25,997 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவர்கள் சங்கம் தரவுகளின்படி, கரோனா மூன்று அலைகளில் உயிரிழந்த மொத்த 1600 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். முதல் அலையில் 757 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 90, மேற்கு வங்கத்தில் 80 பேர் பலியாகினர்.

இரண்டாம் அலையில்தான் மருத்துவர்கள் அதிகபட்சமாக உயிரிழந்தனர். தில்லியில் 128, பிகாரில் 115, உத்தரப் பிரதேசம் 79 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.