திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி மீட்பு

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி 4 மணி நேர போராட்டத்திற்குபின் மீட்கப்பட்டார். 

News image
Updated On :29 ஜூலை 2022, 12:52 pm

DIN

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி 4 மணி நேர போராட்டத்திற்குபின் மீட்கப்பட்டார். 

குஜராத் மாநிலம், சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் 12 வயது சிறுமி மணிஷாவின் பெற்றோர் வயலில் இன்று வேலை செய்துகொண்டிருந்தனர். இவர்ளுடன் மணிஷாவும் உடன் சென்றிருக்கிறார்.

வயலில் விளையாடிக்கொண்டிருந்த மணிஷா அருகிலிருந்த சுமார் 500 முதல் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார். உடனே இதுகுறித்து ராணுவ வீரர்கள் மற்றும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் 60 ஆழத்தில் சிக்கிய சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். 

சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுமி ஆழ்துளைக்கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.