நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

36இல் இருந்து 200: இந்தியாவில் அதிகரித்த வெப்ப அலைகள்

நாட்டில் நடப்பாண்டில் 200க்கும் அதிகமான நாள்களில் வெப்ப அலைகளின் தாக்கம் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2022, 8:20 pm IST

நாட்டில் நடப்பாண்டில் 200க்கும் அதிகமான நாள்களில் வெப்ப அலைகளின் தாக்கம் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை மாற்றமானது மிக வேகமாக நடைபெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 மடங்கு நாள்களில் வெப்ப அலை பாதிப்பு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2021ஆம் ஆண்டு 36 நாள்கள் பதிவான வெப்ப அலைகளானது நடப்பாண்டு 203 நாள்களாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் கடந்த ஆண்டு 2 நாள்கள் மட்டுமே பதிவான வெப்ப அலைகளானது நடப்பாண்டு 12 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக உத்தரகண்ட் மாநிலத்தில் 28 நாள்களும், ராஜஸ்தானில் 26 நாள்களும், பஞ்சாப், ஹரியாணாவில் 24 நாள்களும் வெப்ப அலை பதிவாகியுள்ளன.

இதன்மூலம் நாட்டில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்ப அலை பதிவாகியுள்ளதாகவும், இதன்காரணமாக வேளாண் துறையில் உற்பத்தி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக நாடு முழுவதும் மார்ச் ஏப்ரல் மாத காலத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளும் 30 மடங்கு அதிகமான வெப்ப அலையை பதிவு செய்துள்ளதாக உலக வானிலை பகுப்பாய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.