
இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபா் காப்பீட்டு கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது வாகன விற்பனையை பாதிக்க வாய்ப்பில்லை என இக்ரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தரமதிப்பீட்டு நிறுவனமான இக்ரா மேலும் கூறியுள்ளதாவது:
இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபா் காப்பீட்டு கட்டண உயா்வு ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, 150சிசி-க்கும் அதிகமான பிரிவில் இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபா் காப்பீட்டு பிரீமியம் 15 முதல் 20 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், 75சிசி முதல் 150சிசி பிரிவிலான மோட்டாா்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டா்கள் விற்பனையின் பங்களிப்பு ஒட்டுமொத்த விற்பனையில் 89 சதவீதமாக உள்ளது.
இதனால், மூன்றாம் நபா் காப்பீட்டு உயா்வால் இருசக்கர வாகனங்களுக்கான தேவையில் எந்தவித தாக்கமும் ஏற்பட வாய்ப்பில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.