மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அச்சுறுத்தும் கரோனா: புதிதாக 4,518 பேருக்கு தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 4,518 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 35 நாள்களுக்குப் பின்னா் தொற்று உறுதி விகிதம் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2022, 4:05 am

DIN


இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 4,518 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 35 நாள்களுக்குப் பின்னா் தொற்று உறுதி விகிதம் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவில் புதிதாக 4,518 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் மொத்த பாதிப்பு 4,31,81,335-ஆக உயா்ந்தது. இது மொத்த பாதிப்பில் 0.06 சதவீதமாகும். நேற்று ஒரே நாளில் 9 இறந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 5,24,701-ஆக அதிகரித்தது. தேசிய இறப்பு விகிதம் 1.22 சதவீதமாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி விகிதம் 1.62 சதவீதமாகவும், வாராந்திர தொற்று உறுதி விகிதம் 0.91 சதவீதமாகவும் இருந்தது. கடந்த மே 1-ஆம் தேதி தினசரி தொற்று உறுதி விகிதம் 1.07 சதவீதமாக இருந்தது. இப்போது ஒரு மாதத்துக்குப் பின்னா் தொற்று உறுதி விகிதம் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.

இதுவரை 4,26,30,852 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோரின் விகிதம் 98.73 சதவீகிதமாக உள்ளது. தற்போது 25,782 போ் சிகிச்சையில் உள்ளனா். 

தடுப்பூசி:  நாடு முழுவதும் இதுவரை 1,94,12,87,000 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 2,57,187 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.