புது தில்லி: நாட்டில் பருவமழையானது படிப்படியாகத் தொடங்குவதாகவும், மகாராஷ்டிரத்தில் இன்றும் இரண்டு நாள்களில் பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், அருணாசலப் பிரதேசத்தில் வரும் 10 - 11ஆம் தேதிகளில் மிக அதிகனமழை (204.5 மிமீக்கும் மேல்)பெய்யும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுபோல அசாம், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 29ஆம் தேதி கேரளத்தை பருவமழை தொட்டுவிட்டது. மே 31ஆம் தேதி முதல் ஜூன் 7 வரையிலான காலக்கட்டத்தில் தென் மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி, கேரளம், கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், தமிழகத்திலும் பருவமழை பரவத் தொடங்கியது.
பருவமழை தொடங்குவதில் எந்த தாமதமும் இல்லை. படிப்படியாக பருவமழை தொடங்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.