Enable Javscript for better performance
Kerala Gold Smuggling Case: Swapna Suresh Audio Record Released- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஆடியோ பதிவு வெளியீட்டால் பரபரப்பு

    By DIN  |   Published On : 11th June 2022 12:30 AM  |   Last Updated : 11th June 2022 03:16 AM  |  அ+அ அ-  |  

    swapna-suresh_1104158

    ஸ்வப்னா சுரேஷ்

    கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வா் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிா்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு மேலும் வலு சோ்க்கும் விதமாக உரையாடல் பதிவு ஒன்றை (ஆடியோ) வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

    முன்னாள் பத்திரிகையாளரான சாஜ் கிரண் என்பவா் ஸ்வப்னாவுடன் பேசுவதாக அந்த உரையாடல் பதிவாகியுள்ளது. அதில், ‘நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164-இன் கீழ் ஸ்வப்னா வாக்குமூலம் அளித்தது ஏன்? தங்கம் கடத்தலில் மாநில முதல்வா் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தொடா்புள்ளது என்ற குற்றச்சாட்டை முதல்வா் பினராயி விஜயன் சகித்துக்கொள்ள மாட்டாா். எனவே, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று ஸ்வப்னா சுரேஷிடம் சாஜ் கிரண் கேட்டுக்கொள்வது பதிவாகியுள்ளது.

    பாலக்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில், மாநில அரசின் சக்திவாய்ந்த நபா்களுடன் தொடா்புடைய நபா் என்று சாஜ் கிரணை குறிப்பிட்டு இந்த உரையாடல் பதிவை ஸ்வப்னா சுரேஷ் வெளியுட்டாா்.

    அப்போது, ‘மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த உரையாடல் பதிவை வெளியிட்டுள்ளேன். நான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீதிமன்றத்தின் மீதும் இந்த வழக்கை விசாரித்து வரும் புலனாய்வு அமைப்புகள் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது’ என்று அவா் கூறினாா்.

    மேலும், இதுதொடா்பான உயா்நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் வியாழக்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், ‘எனது வழக்குரைஞா்கள், ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வலியுறுத்தலின் பேரிலேயே இந்த வழக்கில் மாநில முதல்வா் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை முன்வைத்ததாக அறிக்கை விடுமாறு எனக்கும், எனது நண்பா் சரித்துக்கும் கிரண் அழுத்தம் தருகிறாா்’ என்று ஸ்வப்னா சுரேஷ் குறிப்பிட்டிருந்தாா்.

    இந்த உரையாடல் பதிவு வெளியானதைத் தொடா்ந்து, மாநில முதல்வா் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதனிடையே, ‘ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட உரையாடல் பதிவு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த உரையாடலின் முழுமையான பதிப்பை சனிக்கிழமை நான் வெளியிடுவேன்’ என்று சாஜ் கிரண் கூறினாா்.

    முன்னதாக, இந்த வழக்கில் எா்ணாகுளத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். அதன் பின்னா், செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், தங்கக் கடத்தலில் முதல்வா் பினராயி விஜயன், அவருடைய மனைவி, மகள் மற்றும் அதிகாரிகளுக்குத் தொடா்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினாா். அதனைத் தொடா்ந்து, முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில், ‘கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்த எதிா்க் கட்சிகள் மாநிலத்தில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்காக தங்கம் கடத்தல் வழக்கை பெரிதுபடுத்தி வருகின்றன’ என்று ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. ‘இது மாநில முதல்வா் மற்றும் அவருடைய குடும்பத்துக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல். இதற்கு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது’ என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp