நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ராகுல் காந்திக்கு ஆதரவாக போராட்டம்: காங். மூத்த தலைவர் கைது

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :15 ஜூன் 2022, 3:57 pm IST

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கைது செய்யப்பட்டார்.

அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

நேஷனல் ஹெரால்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் மூன்றாவது நாளாக இன்றும் (ஜூன் 15) அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையலுவலகத்திலும், விசாரணை நடைபெற்று வரும் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Story image

தடை உத்தரவை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல் துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதில் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டும் கைது செய்யப்பட்டார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸை சேர்ந்த பிரமுகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.