விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வங்கதேசத்தின் மிகப்பெரிய பாலத்தைத் திறந்துவைத்தார் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தின் மிகப்பெரிய பத்மா பாலத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா  இன்று திறந்து வைத்தார். 

News image
Updated On :25 ஜூன் 2022, 11:47 am

வங்கதேசத்தின் மிகப்பெரிய பத்மா பாலத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா  இன்று திறந்து வைத்தார். 

பத்மா ஆற்றின் மீது 6.15 கி.மீ நீளம் கொண்ட பாலத்தை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 

வங்கதேசத்தின் 19 தென்மேற்கு மாவட்டங்களை மற்ற பகுதிகளுடன் இந்த பாலம் இணைக்கிறது. 

இதுதொடர்பாக அந்நாட்டு பிரதமர் பேசுகையில், 

இந்த பாலம் வெறும் செங்கல், சிமெண்ட், இரும்பு மற்றும் கான்கிரீட் அல்ல. இந்த பாலம் நமது பெருமை, நமது திறன், நமது வலிமை, நமது கண்ணியத்தின் சின்னம். இந்த பாலம் வங்கதேச மக்களுக்கு சொந்தமானது என்றார். 

பத்மா பாலம் கட்டுமானத்தின் தரம் தொடர்பாக எந்த சமரசமும் இல்லை. இது மிக உயர்ந்த தரத்தைப் பராமரிக்கும் வகையில் கட்டப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.