தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

‘அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்’: சஞ்சய் ரெளத்

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நாளை ஆஜராகப் போவதில்லை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

News image
சஞ்சய் ரெளத்
Updated On :27 ஜூன் 2022, 9:44 am

DIN

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நாளை ஆஜராகப் போவதில்லை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

நிலமோசடி வழக்கில் ஜூன் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்திற்கு மத்திய அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து சஞ்சய் ரெளத் பேசியவாதது:

“அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அறிந்தேன். நான் மண்டியிட மாட்டேன். அதிருப்தி எம்எல்ஏக்கள் என்ன செய்தாலும் நான் குவாத்தி செல்லமாட்டேன். நான் எனது கட்சியுடன் தான் இருப்பேன். நான் நாளை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அமாலாக்கத்துறையில் ஆஜராக காலவகாசம் கோருவேன். ஆனால், நிச்சயமாக விசாரணையை எதிர்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியின் சிவசேனை கட்சியை சேர்ந்த ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.