புது தில்லி : கரோனா பேரிடருக்கு முந்தைய நிலையை விமானப் பயணிகள் எண்ணிக்கை எட்டியிருப்பதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா தெரிவித்துள்ளார்.
கரோனா பேரிடருக்கு முன்பு, நாள்தோறும் பயணிக்கும் விமானப் பயணிகளின் சராசரி 4 லட்சம். கடந்த டிசம்பர் மாதத்தில், அந்த சராசரி 3.83 லட்சமாக இருந்தது. எனவே, நாம் கரோனாவுக்கு முந்தைய நிலையை மிக விரைவாக எட்டி வருகிறோம் என்று மத்திய அமைச்சர் நம்பிக்கை அளித்துள்ளார்.
இதையும் படிக்க.. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட பல துறைகளில் விமானப் போக்குவரத்துத் துறையும் ஒன்றாக இருந்தது. இந்தக் காலக்கட்டங்களில் ஒரு நாளைக்கு பயணம் செய்யும் விமானப் பயணிகளின் சராசரி 1.60 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.