நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல: மல்லிகார்ஜுன கார்கே

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே(கோப்புப்படம்)

Updated On :14 மார்ச் 2022, 11:25 am IST

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதனிடையே, பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸின் காரியக் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் பதவி, தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருப்பதாவது:

ஐந்து மாநிலங்களில் அடைந்த தோல்விக்கு சோனியா காந்தியோ அல்லது காந்தி குடும்பத்தினர் மட்டுமே பொறுப்பு இல்லை என சோனியா காந்தியிடம் நாங்கள் அனைவரும் தெரிவித்தோம். தோல்விக்கு அனைத்து மாநிலத் தலைவர்களும், எம்.பி.க்களும் தான் பொறுப்பு.

சோனியா காந்தி மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். அவர், ராஜிநாமா செய்வது குறித்து எந்த கேள்வியும் இல்லை.

கட்சியை வலுப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜக மற்றும் அதன் சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவோம். எங்கள் சித்தாந்தத்தை வலுபடுத்தி, வருகின்ற தேர்தல்களில் முன்பைவிட சிறப்பாக செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.