கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மணிப்பூர் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கிறார் பிரேன் சிங்: பாஜக அறிவிப்பு

முதல்வரை தேர்வு செய்வது குறித்து தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பிரேன் சிங் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

News image

மீண்டும் மணிப்பூர் முதல்வராகிறார் பிரேன் சிங்

Updated On :20 மார்ச் 2022, 11:25 am

DIN

மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வரைத் தேர்வு செய்வது குறித்து தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பிரேன் சிங் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மணிப்பூர் உள்பட உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு மார்ச் 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 

இதில் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியடைந்தது.

இதனைத்தொடர்ந்து முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பாக மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (மார்ச் 20) நடைபெற்றது. பாஜக மேலிடப் பொறுப்பாளர்களாக நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தின் முடிவில் பிரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 

பிரேன் சிங் அரசியல் பாதை:

கடந்த 2002-இல் ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் பிரவேசம் எடுத்த அவா், ஹெய்ன்காங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதன்பின்னா் காங்கிரஸில் இணைந்து 2003-இல் அப்போதைய முதல்வா் ஒக்ரம் இபோபி சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்தாா். பின்னா், இபோபி சிங்கின் நம்பிக்கைக்குரிய நபராக மாறிய பிரேன் சிங், 2007 சட்டப் பேரவைத் தோ்தலிலும் ஹெய்ன்காங் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் அமைச்சரானாா்.

இதையடுத்து 2012 தோ்தலில் தொடா்ந்து 3-ஆவது முறையாக அதே தொகுதியிலிருந்து அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், இபோபி சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸிலிருந்து கடந்த 2016-இல் விலகிய அவா், எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். பாஜக செய்தித்தொடா்பாளராகவும், தோ்தல் நிா்வாகக் குழு இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், 2017 சட்டப் பேரவைத் தோ்தலில் அதே ஹெய்ன்காங் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவா், மணிப்பூா் மாநில முதல்வராக முதன்முறையாக பதவியேற்றாா்.

அந்தத் தோ்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக வெறும் 21 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்நிலையில் 28 தொகுதிகளில் வென்ற காங்கிரஸிலிருந்து சில எம்எல்ஏக்களை பாஜக பக்கம் வரவழைத்து ஆட்சியமைத்தாா் பிரேன் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.