மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் மே 10-ம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பருவ மழைக்கு முந்தைய பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு ஆகிய விமான நடவடிக்கைகளுக்காக, , RWYs 14/32 மற்றும் 09/27 ஆகிய இரண்டு ஓடுபாதைகளும் 10-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஓடுபாதைகளின் பராமரிப்பு பணிகள் மாலை 5 மணிக்கு முடிந்ததும், அன்றைய தினம் வழக்கமான செயல்பாடுகள் தொடங்கும்.
சிரமங்களைத் தவிர்க்க அனைத்து பயணிகளும் மே 10ம் தேதியன்று விமான அட்டவணையை அந்தந்த விமான நிறுவனங்களுடன் சரிபார்க்குமாறு சத்ரபதி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.