முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியம் நிறுத்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நூற்றுக்கணக்கான முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்காததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தேசத்தை அவமதித்துள்ளார்
முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியம் நிறுத்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


புதுதில்லி: நூற்றுக்கணக்கான முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்காததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தேசத்தை அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரே பதவி, ஒர் ஓய்வூதியம் என்ற மோடி அரசின் ஏமாற்றத்திற்குப் பின், தற்போது ​​'ஆல் ரேங்க், நோ பென்சன்' என்ற கொள்கையை ஏற்றுக்கொள்கிறது.

நமது ராணுவ வீரர்களை அவமதிப்பது நமது தேசத்தை அவமதிக்கும் செயலாகும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அரசு விரைந்து வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com