புது தில்லி: 2022-23 நிதியாண்டின் முதல் மாதத்தில் தில்லி ஜிஎஸ்டி வசூல் ரூ.2,898 கோடியாக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததுள்ளது.
தில்லியின் ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் இதுவே அதிகபட்சம் ஆகும்.
இதையும் படிக்க: உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 62.84 லட்சமாக அதிகரிப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா தொற்றின் மூன்று அலைகளால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு தேசிய தலைநகரின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதற்கான சிறந்த அடையளமாக ஜிஎஸ்டி வசூல் உள்ளது.
ஏப்ரல் 2021-22ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2,325 கோடியாக இருந்தது. 2020-21ல் ரூ.320 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.