குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சரியான நேரத்தில் பிரேக்.. கடந்து சென்றது யானை: செம்ம விடியோ

யானை கடக்க வருவதை வெகு தொலைவிலேயே பார்த்துவிட்டு ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக பிரேக் போட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்து, யானை பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்து செல்ல உதவினார்.

News image

சரியான நேரத்தில் பிரேக்.. கடந்து சென்றது யானை: செம்ம விடியோ

Updated On :14 மே 2022, 1:37 pm IST

தண்டவாளத்தை யானை கடக்க வருவதை வெகு தொலைவிலேயே பார்த்துவிட்டு ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக பிரேக் போட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்து, யானை பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்து செல்ல உதவினார்.

இந்த நிகழ்வு முழுக்க ரயில் எஞ்ஜின் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட விடியோவில் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் குல்மாவிலிருந்து சிவோக் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் ஆர்.ஆர். குமார் மற்றும் எஸ். குண்டு ஆகியோர், தண்டவாளத்துக்கு மிக அருகே கரிய நிற உருவம் தென்படுவதை வெகு தொலைவிலிருந்தே கவனித்து விட்டார்கள்.

வனப்பகுதிகளில் ரயிலை இயக்கி அனுபவம் கொண்டிருந்த ஓட்டுநர், உடனடியாக நிலைமையை புரிந்து கொண்டு பிரேக் போட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார்.

ரயிலின் வேகம் குறையவும், அந்த பெரிய கரிய நிறம் தண்டவாளப் பகுதியை அணுகவும் சரியாக இருந்தது. ரயில் மெல்ல சென்று கொண்டிருக்க, எந்த பதற்றமும் இல்லாமல், தங்களது வழித்தடங்களை மறித்துப் போடப்பட்டிருந்த தண்டவாளத்தை மெல்ல கடந்து செல்கிறது. அந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அவ்வளவு பெரிய கரிய உருவம் சென்று மறைந்துவிட்டது. பிறகு அவ்விடத்தை ரயில் கடந்து செல்கிறது.

இந்த நிகழ்வு முழுக்க ரயிலில் இருந்து எடுக்கப்பட்ட கேமராவில் பதிவாகி, இன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

பலரும் இந்த விடியோவைப் பார்த்து ரயில் ஓட்டுநருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.