தண்டவாளத்தை யானை கடக்க வருவதை வெகு தொலைவிலேயே பார்த்துவிட்டு ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக பிரேக் போட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்து, யானை பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்து செல்ல உதவினார்.
இந்த நிகழ்வு முழுக்க ரயில் எஞ்ஜின் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட விடியோவில் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் குல்மாவிலிருந்து சிவோக் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் ஆர்.ஆர். குமார் மற்றும் எஸ். குண்டு ஆகியோர், தண்டவாளத்துக்கு மிக அருகே கரிய நிற உருவம் தென்படுவதை வெகு தொலைவிலிருந்தே கவனித்து விட்டார்கள்.
வனப்பகுதிகளில் ரயிலை இயக்கி அனுபவம் கொண்டிருந்த ஓட்டுநர், உடனடியாக நிலைமையை புரிந்து கொண்டு பிரேக் போட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார்.
#Alert LP & ALP of 15767 Up SGUJ-APDJ Intercity Exp Sri R.R. Kumar & S. Kundu suddenly noticed one Wild Elephant crossing the track at KM 23/1 between Gulma-Sivok at 17.35 hrs yesterday & applied brake to control Train speed saving Wildlife. @wti_org_india@RailMinIndia @RailNf pic.twitter.com/12PC5ffTqO
â DRM APDJ (@drm_apdj) May 12, 2022
ரயிலின் வேகம் குறையவும், அந்த பெரிய கரிய நிறம் தண்டவாளப் பகுதியை அணுகவும் சரியாக இருந்தது. ரயில் மெல்ல சென்று கொண்டிருக்க, எந்த பதற்றமும் இல்லாமல், தங்களது வழித்தடங்களை மறித்துப் போடப்பட்டிருந்த தண்டவாளத்தை மெல்ல கடந்து செல்கிறது. அந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அவ்வளவு பெரிய கரிய உருவம் சென்று மறைந்துவிட்டது. பிறகு அவ்விடத்தை ரயில் கடந்து செல்கிறது.
இந்த நிகழ்வு முழுக்க ரயிலில் இருந்து எடுக்கப்பட்ட கேமராவில் பதிவாகி, இன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
பலரும் இந்த விடியோவைப் பார்த்து ரயில் ஓட்டுநருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சிகளால் ஸ்தம்பிக்கும் தில்லி... இன்றைய நேரலை (ஜூலை 22)

ஜூலை 20 போராட்டம் டிரைலர்தான்; எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால்...! சிஜேபி எச்சரிக்கை

சிஜேபி போராட்டம்! மாணவர்களுக்கு எதிராக 10 எஃப்ஐஆர்-கள் பதிவு! என்னென்ன பிரிவுகள்?







