நாட்டின் தலைநகரான தில்லியில் இன்று 49 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியதான இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த சில நாள்களுக்கு தில்லியில் வெப்ப அலை நீடிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தில்லியின் முன்கேஷ்பூர் பகுதியில் 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், , நஜாஃப்கார் பகுதியில் 49.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதேபோன்று குருகிராம் பகுதியிலும் 48.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளாதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வந்த நிலையில், அடுத்த சில நாள்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்பதால், வானிலை மையம் தில்லி நகருக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட மாநிலங்களான தில்லி, ராஜஸ்தான், பிகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

