திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை: எங்கு தெரியுமா?

கடந்த சில நாள்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வந்த நிலையில், அடுத்த சில நாள்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்: வானிலை மையம்

News image
கோப்புப் படம்
Updated On :15 மே 2022, 2:51 pm

DIN


நாட்டின் தலைநகரான தில்லியில் இன்று 49 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியதான இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த சில நாள்களுக்கு தில்லியில் வெப்ப அலை நீடிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

தில்லியின் முன்கேஷ்பூர் பகுதியில் 49.2  டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், , நஜாஃப்கார் பகுதியில் 49.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதேபோன்று குருகிராம் பகுதியிலும் 48.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளாதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வந்த நிலையில், அடுத்த சில நாள்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்பதால், வானிலை மையம் தில்லி நகருக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வட மாநிலங்களான தில்லி, ராஜஸ்தான், பிகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.