47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதுநிலை நீட்: 2.06 லட்சம் பேர் எழுதினர்

நிகழாண்டு முதுநிலை நீட் தேர்வு 267 நகரங்களில் 849 மையங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

News image
கோப்புப்படம்
Updated On :21 மே 2022, 8:59 am

DIN


நிகழாண்டு முதுநிலை நீட் தேர்வு 267 நகரங்களில் 849 மையங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன. இதையடுத்து, முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், முதுநிலை நீட் தேர்வானது திட்டமிட்டபடி நடைபெறும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.

இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வு அனைத்து மையங்களிலும் இன்று மிகவும் அமைதியாக நடைபெற்றது. தேர்வு மையங்களில் தேர்வு நடத்துவதற்கு 1,700 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 849 மையங்களில் நடைபெற்ற முதுநிலை நீட் தேர்வை 2,06,301 தேர்வர்கள் எழுதினர்.

இந்தத் தேர்வு 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

முன்னதாக, முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் கடந்த மே 13-ம் தேதி மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.