தன்னையும் தன் குடும்பத்தையும் விசாரணை அமைப்புகள் குறிவைப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விதிமுறைகளை மீறி 263 சீனப் பணியாளர்களுக்கு விசா பெற்றுத் தருவதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முற்றிலும் நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்புகளை சிபிஐ கைப்பற்றி நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியுள்ளதாகவும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், 'பொய் வழக்குப் போட்டு தனது குரலை ஒடுக்க சிபிஐ முயற்சிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தன்னையும், தனது குடும்பத்தையும் விசாரணை அமைப்புகள் குறிவைக்கின்றன.
நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பான எனது ரகசியமான தனிப்பட்ட குறிப்புகளை சிபிஐ சோதனையின்போது கைப்பற்றிவிட்டது. நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ மீறிவிட்டது. சிபிஐ நடவடிக்கை எனது நாடாளுமன்ற செயல்பாடுகளில் நேரடியாக தலையிடுகிறது . இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை