தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

1979-ல் அணை வெடிப்பில் தப்பியவருக்கு இம்முறை அதிர்ஷ்டம் இல்லை: மோர்பி விபத்தில் பலி

1979ஆம் ஆண்டு மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை இடிந்து ஏற்பட்ட பேரிடரில் சிக்கி உயிர் தப்பிய பெண்ணுக்கு இந்த முறை அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.

News image
Updated On :2 நவம்பர் 2022, 5:35 pm IST


ஆமதாபாத்: 1979ஆம் ஆண்டு மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை இடிந்து ஏற்பட்ட பேரிடரில் சிக்கி உயிர் தப்பிய பெண்ணுக்கு இந்த முறை அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.

19 வயதாக இருந்த மும்தாஜ் மக்வானா, சுமார் 2000 பேரின் உயிர்களை பலி வாங்கிய அந்த விபத்தின் போது உயிர் தப்பிக் கடந்த 43 ஆண்டுகளாக அந்த பயங்கர நினைவுகளுடன் வாழ்ந்து வந்தார்.

மச்சு அணை வெடித்து அக்கம் பக்கத்தில் இருந்த கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து, ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்த விபத்தில் தப்பி, 62 வயதை எட்டியிருந்த மும்தாஜ், ஞாயிற்றுக்கிழமை அதே மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து பலியான 135 பேரில் ஒருவராகிப் போனார்.

தனது தாய் உயிர் பிழைத்த அந்த அணை வெடிப்பு சம்பவம் குறித்து அடிக்கடி அவர் நினைவுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வார், ஆனால் தற்போது அவரே நினைவாகிப் போனாரே என்று கலங்கி அழுகிறார் அவரது மகன் தாரிக். 

வெள்ளத்தில் சிக்கிய பலரையும் தனது தாய் அந்த வயதிலேயே துணியைப் போட்டு இழுத்துக் காப்பாற்றியதாகவும், அவரைப் பற்றி அவரது பெற்றோர் பெருமையாகச் சொல்லக் கேட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

அந்த விபத்து நேரிட்ட போது, மூன்று நாள்கள் வீட்டின் கூரை மீதே அமர்ந்திருந்ததாகக் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

விபத்து நிகழ்ந்த ஞாயிறன்று, மும்தாஜ், தாரிக்கின் மனைவி ஷபானா (28), மகன் ஆஷாஹ்த் (8) ஆகியோர், புதிதாகத் திறந்த பாலத்தைக் காணச் சென்றதாகவும், அவர்கள் யாருமே திரும்பி வரவில்லை என்றும் கூறுகிறார் தாரிக். 

எங்களுக்கு நீதி வேண்டும் என்றும், எங்களது இழப்பை ஈடு செய்யவே முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.