குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கவுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பானது, குஜராத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தை தற்போது பாஜக ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12-ல் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.