
மும்பை பகுதியில் புறநகர் விரைவு ரயில்கள் 15-20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் மும்பைப் பிரிவு ரயில்வே மேலாளர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, புறநகர்ப் பகுதியில் உள்ள அனைத்து புறநகர் விரைவு ரயில்களும் 15-20 நிமிடங்கள் தாமதமாக இயங்குகின்றன.
இதையும் படிக்க- 9-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
எனவே, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மும்பையில் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 70 ரயில்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஆறு நீண்ட தூர ரயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாக மும்பை வந்தடைந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.