நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரூ.141 கோடி சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் ஹரியாணா முதல்வர்!

ஹரியாணாவில் ரூ.141 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களை அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தொடங்கி வைத்தார். 

News image

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார்

Updated On :5 நவம்பர் 2022, 6:13 pm IST

ஹரியாணாவில் ரூ.141 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களை அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தொடங்கி வைத்தார். 

பாசாய் சௌக்கில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலம் மற்றும் குருகிராமில் பிரதான பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்ட மகாவீர் சௌக் ஆகியவற்றை இன்று தொடங்கி வைத்துள்ளார். 

தொடங்கிவைத்து அவர் மேலும் கூறியதாவது, 

சாலை, உள்கட்டமைப்பு மற்றும் மெட்ரோ விரிவாக்கம் ஆகிய திட்டங்களையும் குறிப்பிட்ட அவர், பாலம் விஹார் பகுதியை தில்லியின் துவாரகா செக்டார்-21 வரை இணைக்கும் மெட்ரோ பாதை விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

ஜிஎம்டிஏ மூலம் செயல்படுத்தப்படும் பிற முக்கியத் திட்டங்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். அதில் 650 படுகைகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி ஷீட்லா மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டுமானம் சுமார் ரூ.542 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. 

மேலும் ஃபரிதாபாத் முதல் தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை வரையிலான தெற்கு புறச் சாலை பலப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் எட்டு மேம்பாலங்கள் கட்டப்படும், இந்த திட்டத்திற்கு சுமார் 846 கோடி ரூபாய் செலவாகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.