வங்காளத்திற்கு எதிராக சிலர் சதித் திட்டம் தீட்டுகிறார்கள்: மம்தா

மாநிலத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும், இதனால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். 
வங்காளத்திற்கு எதிராக சிலர் சதித் திட்டம் தீட்டுகிறார்கள்: மம்தா
Published on
Updated on
1 min read

மாநிலத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும், இதனால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். 

இதுகுறித்து மம்தா கூறுகையில், 

ஊழல் வழக்குகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களுக்கு இவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். 

அரசுக்கு எதிராக சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் திரினாமுல் காங்கிரஸுக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 

மூத்த தலைவர்கள் தவறு செய்திருந்தால், அந்தத் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். 

தவறு இழைத்தவர்களைத் தண்டிக்க சட்டம் தன் கடமையைச் செய்யும். ஆனால் ஊடகம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது என்று பானர்ஜி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com