தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மருத்துவரின் சிறுநீரகங்களை கேட்கும் பிகார் பெண்: அதிர்ச்சி தரும் காரணம்

பிகார் மாநிலம் முசாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்த சுனிதா தேவி, தனது இரண்டு சிறுநீரகங்களையும் திருடிக் கொண்டு உயிரை ஊசலாடவிட்ட மருத்துவரின் சிறுநீரகங்களை எடுத்து தனக்குப் பொருத்துமாறு வலியுறுத்தி வருகிறார்

News image

மருத்துவரின் சிறுநீரகங்களை கேட்கும் பிகார் பெண்: அதிர்ச்சி தரும் காரணம்

Updated On :16 நவம்பர் 2022, 3:50 pm IST

பாட்னா: பிகார் மாநிலம் முசாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்த சுனிதா தேவி, தனது இரண்டு சிறுநீரகங்களையும் திருடிக் கொண்டு உயிரை ஊசலாடவிட்ட மருத்துவரின் சிறுநீரகங்களை எடுத்து தனக்குப் பொருத்துமாறு வலியுறுத்தி வருகிறார்.

செப்டம்பர் மாதம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்ற சுனிதா தேவிக்கு அறுவை சிகிச்சை செய்து இரண்டு சிறுநீரகங்களும் திருடப்பட்டது அண்மையில் தெரிய வந்தது.

38 வயதாகும் சுனிதா தேவி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ச்சியாக டயாலிஸிஸ் செய்துகொண்டுவருகிறார்.

தனக்கு நேர்ந்த துயரம் குறித்து பேசிய சுனிதா, உடனடியாக இந்த மோசடியில் ஈடுபட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டு, அவரது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு, எனக்குப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன். 

மருத்துவரின் சிறுநீரகங்கள் பொறுத்தப்பட்டால்தான் என்னால் உயிர்பிழைக் முடியும் என்கிறார்.

இப்படி செய்தால் மட்டுமே, அடுத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு இது உகந்த பாடமாக இருக்கும் என்றும், பணத்துக்காக ஏழைகளின் உயிரோடு விளையாட மாட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை கவனித்துக் கொள்வதற்காக நான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று கூறும் சுனிதா, கருப்பை பிரச்னைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது அறுவை சிகிச்சை செய்து இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவர்கள் அகற்றிவிட்டதாகவும், அதன்பிறகு தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, மற்றொரு மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தெரிய வந்ததாகக் கூறுகிறார்.

குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் தலைமறைவாக இருக்கிறார். அவரைக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

தான் ஏழை என்பதால், எனது பிரச்னையை மாநில அரசு கவனிக்கவில்லை என்று ஒருநாள் விட்டு ஒரு நாள் டயாலிசிஸ் செய்தால் மட்டுமே தான் உயிரோடு இருக்க முடியும் என்கிறார் வேதனையோடு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.