நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் முன்கூட்டியே விசாரணை நடத்தக்கோரி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை அமலாக்கத் துறை நிராகரித்துள்ளது.
வழக்கு விசாரணைக்காக நவம்பர் 17ஆம் தேதி ஆஜராக வேண்டும் என முன்பு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணையை முன்கூட்டியே (நவ.16) நடத்த வேண்டும் என ஹேம்ந்த் சோரன் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதனை தற்போது அமலாக்கத் துறை நிராகரித்துள்ளது. இதன் மூலம் ஹேமந்த் சோரன் நாளை அமலாக்கத் துறை முன்பு கட்டாயம் ஆஜராக வேண்டும் என்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாா்க்கண்ட் சுரங்க முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு நவ. 3ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்ற ஹேமந்த் சோரனுக்கு ஏற்கெனவே அமலாக்கத் துறையின் சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், அவர் அமலாக்கத் துறை முன்பு ஆஜராகாமல், சத்தீஸ்கரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்த வழக்கில் ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளா் பங்கஜ் மிஸ்ரா உள்பட 3 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா். சுரங்கப் பணிகளில் இதுவரை ரூ.1000 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



