அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த மணமக்கள்! பரவும் புகைப்படம்

ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

News image
திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த மணமக்கள்! பரவும் புகைப்படம்
Updated On :22 நவம்பர் 2022, 9:01 am

DIN


திருவனந்தபுரம்: நீங்கள் அங்கே நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதால்தான் நாங்கள் இங்கே மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்கிறோம் என்று ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக, குல தெய்வத்தின் பெயருடன் தொடங்கி, மச்சான், மாமன், மாமன் மகன், பேரன் பெயர்த்திகளின் பெயர்களுடன் இறுதியாக திருமண மண்டபத்துக்கு அருகே வரும் பேருந்து எண்களுடன் நிறைவு பெறும் திருமண அழைப்பிதழ்களைத்தான் பார்த்திருப்போம். சிலர், திருக்குறள், கவிதை என விதவிதமாக திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து நண்பர்களின் கவனத்தை ஈர்த்திருப்பார்கள்.

ஆனால், இங்கே கேரள திருமண வீட்டார், நாட்டுக்குள் நாங்கள் அமைதியாக மகிழ்ச்சியாக வாழ, எல்லையில் காவல் காக்கும் இந்திய ராணுவத்தினர்தான் காரணம் என்று கூறி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தங்களது கைப்பட எழுதிய வாசகங்களை அச்சட்டு அசத்தியுள்ளனர்.

இந்த திருமண அழைப்பிதழ்தான் இன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்படும் பேசுபொருளாகவும், பல செய்தி ஊடகங்களில் முக்கிய செய்தியாகவும் மாறியுள்ளது.

கேரள மணமக்கள் ராகுல் - கார்த்திகாவின் திருமணம் நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது. இவர்கள் அச்சடித்த திருமண அழைப்பிதழில், உங்களால்தான் நாங்கள் நிம்மதியாக உறங்குகிறோம். எங்களுக்கு மிக மகிழ்ச்சியான நாள்களை அளிக்கும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உங்களால்தான் நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்கிறோம். எங்களுக்கு மிகச் சிறப்பான இந்த நன்னாளில், உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.

இந்த திருமண அழைப்பிதழை, பகிர்ந்து, இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில், மணமக்களுக்கு வாழ்த்துகளும், திருமண அழைப்பிதழில் நன்றி தெரிவித்திருப்பதற்கு தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.