மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?

ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  மின்சார மானியம் பெறுவதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?

சென்னை: தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன், அந்த இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  மின்சார மானியம் பெறுவதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில், ஆதார் எண்ணை இணைக்க மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் சிறப்பு வசதி செய்துள்ளது. மேலும், https://adhar.tnebltd.org/adharupload/ என்ற பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.

நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று, மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலைக் கொடுத்து ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின்படி, மக்கள், 100 யூனிட் மின்சார மானியத்தைப் பெற, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம் என்று அறிவித்திருந்தது. அதே வேளையில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படாது என்றும் அறிவித்திருந்தது.

அதாவது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, யார் யாருக்கு மானியம் சென்றடைகிறது என்பது குறித்த தரவுகளைப் பராமரிக்கவே ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

ஆதார் எண்ணை இணைக்கும் முன், உங்கள் ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை இரண்டும் உங்கள் கையில் இருக்க வேண்டும். மேலும், ஆதார் அட்டையின் புகைப்படமும், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆதார் அட்டையின் புகைப்படம் சேவை வழங்கும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிறகு, tanged.gov.in பக்கத்தில் சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கவும் அல்லது https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

அதில், ப்ளீஸ் கிளிக் ஹியர் டு வியூ தீஷ் ஃபார்மட்ஸ் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் சர்வீஸ் எண், கன்ஸ்யூமர் அல்லது நுகர்வோர் எண் உள்ளிட்டவற்றை உங்கள் மின் கட்டண அட்டையில் எங்கிருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பிறகு, உங்கள் மின் இணைப்பு அட்டையில் இருக்கும் விவரங்களைக் கொண்ட மண்டலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

மீண்டும் முகப்புப் பக்கத்துக்கு வந்து, உங்கள் சர்வீஸ் கனெக்ஷன் எண்ணைப் பதிவிடுங்கள். பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணையும் பதிவிடுங்கள். அதற்கு ஒரு ஓடிபி வரும். அதனை உள்ளிடவும்.

அடுத்த பக்கத்தில், உரிமையாளரின் பெயர், உள்ளிட்ட விவரங்கள் வரும், இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரம் கேட்கும். அதற்கு சரியான தகவலை அளித்து, உங்கள் ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்யவும். பிறகு ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிடவும்.

பிறகு, உங்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை 300கே.பி. என்ற அளவுக்குள் இருக்குமாறு பதிவேற்றம் செய்யவும்.

பிறகு, இங்கே கொடுத்திருக்கும் தகவல்கள் உண்மையானவை என்று சான்றளித்து சப்மிட் செய்யவும். பிறகு உங்களது ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற தகவல் வரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com