ஹைதராபாத்: காவல்துறை - திருடர்களுக்கு இடையே இருக்கும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிரடிப்படை தலைமைக் காவலர்.
3 சிறார்கள் உள்பட செல்லிடப்பேசி திருடர்கள், 9 பிக்பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு அதன் தலைவனாக செயல்பட்டுள்ளார் அதிரடிப்படை தலைமைக் காவலர் மேகலா ஈஸ்வர் என்கிற ஈஸ்வர் பிரசாத் (35).
இதையும் படிக்க.. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?
செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈஸ்வர் தலைமையில் வேலை செய்து வருவதை ஒப்புக் கொண்டனர்.
சிறுவர்களை தவறாக வழிநடத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வரும் புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிக்பாக்கெட் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஒன்பது பேரை வைத்துக் கொண்டு, ஹைதராபாத், நல்கொண்டா, சூர்யாபெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈஸ்வர் செல்லிடப்பேசி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருட்டுக் கும்பல் திருடிக் கொண்டு வரும் செல்லிடப்பேசிகளை ஈஸ்வர் எடுத்துக் கொண்டு, அதனை விற்று அதில் வரும் லாபத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், திருடர்கள் மாட்டிக் கொண்டால் தான் உதவுவதாகவும் ஈஸ்வர் கூறியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.