இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அந்நியன் பாணியில்.. அதிரடிப் படை காவலர் - பிக்பாக்கெட் கும்பல் தலைவன்

காவல்துறை - திருடர்களுக்கு இடையே இருக்கும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிரடிப்படை தலைமைக் காவலர்.

News image
அந்நியன் பாணியில்.. அதிரடிப் படை காவலர் - பிக்பாக்கெட் கும்பல் தலைவன்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:54 am

DIN


ஹைதராபாத்: காவல்துறை - திருடர்களுக்கு இடையே இருக்கும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிரடிப்படை தலைமைக் காவலர்.

3 சிறார்கள் உள்பட செல்லிடப்பேசி திருடர்கள், 9 பிக்பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு அதன் தலைவனாக செயல்பட்டுள்ளார் அதிரடிப்படை தலைமைக் காவலர் மேகலா ஈஸ்வர் என்கிற ஈஸ்வர் பிரசாத் (35).

செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈஸ்வர் தலைமையில் வேலை செய்து வருவதை ஒப்புக் கொண்டனர்.

சிறுவர்களை தவறாக வழிநடத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வரும் புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிக்பாக்கெட் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஒன்பது பேரை வைத்துக் கொண்டு, ஹைதராபாத், நல்கொண்டா, சூர்யாபெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈஸ்வர் செல்லிடப்பேசி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருட்டுக் கும்பல் திருடிக் கொண்டு வரும் செல்லிடப்பேசிகளை ஈஸ்வர் எடுத்துக் கொண்டு, அதனை விற்று அதில் வரும் லாபத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், திருடர்கள் மாட்டிக் கொண்டால் தான் உதவுவதாகவும் ஈஸ்வர் கூறியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.