ஹைதராபாத்: காவல்துறை - திருடர்களுக்கு இடையே இருக்கும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிரடிப்படை தலைமைக் காவலர்.
3 சிறார்கள் உள்பட செல்லிடப்பேசி திருடர்கள், 9 பிக்பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு அதன் தலைவனாக செயல்பட்டுள்ளார் அதிரடிப்படை தலைமைக் காவலர் மேகலா ஈஸ்வர் என்கிற ஈஸ்வர் பிரசாத் (35).
இதையும் படிக்க.. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?
செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈஸ்வர் தலைமையில் வேலை செய்து வருவதை ஒப்புக் கொண்டனர்.
சிறுவர்களை தவறாக வழிநடத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வரும் புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிக்பாக்கெட் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஒன்பது பேரை வைத்துக் கொண்டு, ஹைதராபாத், நல்கொண்டா, சூர்யாபெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈஸ்வர் செல்லிடப்பேசி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருட்டுக் கும்பல் திருடிக் கொண்டு வரும் செல்லிடப்பேசிகளை ஈஸ்வர் எடுத்துக் கொண்டு, அதனை விற்று அதில் வரும் லாபத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், திருடர்கள் மாட்டிக் கொண்டால் தான் உதவுவதாகவும் ஈஸ்வர் கூறியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



