Enable Javscript for better performance
ஷ்ரத்தா கொலையில் முக்கிய ஆதாரமாக மாறுமா தாடை எலும்பு?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஷ்ரத்தா கொலையில் முக்கிய ஆதாரமாக மாறுமா தாடை எலும்பு?

    By DIN  |   Published On : 22nd November 2022 10:51 AM  |   Last Updated : 22nd November 2022 11:15 AM  |  அ+அ அ-  |  

    aftab_shradha

    ஷ்ரத்தாவின் கொலையில் முக்கிய ஆதாரமாக மாறுமா தாடை எலும்பு?

    புது தில்லி: புது தில்லியில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வால்கரைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டி புது தில்லியின் பல்வேறு இடங்களிலும் வீசிய சம்பவத்தில், கிடைத்திருக்கும் மனிதத் தாடைப் பகுதி, கொலையின் முக்கிய ஆதாரமாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மனிதத் தாடை எலும்புப் பகுதி கிடைத்திருப்பதாகவும், தில்லியைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற பல் மருத்துவரிடம் உதவி கோரப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதையும் படிக்க.. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?

    கிடைத்திருக்கும் தாடைப் பகுதி 27 வயதான கொலை செய்யப்பட்ட பெண்ணின் எலும்புதானா என்பதை உறுதி செய்ய பல்வேறு தரவுகளையும் மருத்துவர் கோரியிருப்பதாகவும், பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு அது ஷ்ரத்தாவின் தாடை எலும்புதானா என்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், காவல்துறையினர் கண்டெடுத்துள்ள தாடைப் பகுதியை பரிசோதனை செய்ததில், அந்த தாடைப் பகுதியிலிருக்கும் பல் வரிசையில் ரூட் கெனால் எனப்படும் சொத்தைப் பற்களுக்கு செய்யப்படும் சிகிச்சை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மும்பையில் இருந்த போது, ஷ்ரத்தா பல்லில் ரூட் கேனால் சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகிறார்கள்.

    இதன் அடிப்படையில், ஷ்ரத்தா ஒரு பல் மருத்துவரிடம் ரூட் கேனால் செய்திருந்தால், அந்த மருத்துவர் அல்லது மருத்துவமனையில், நோயாளியின் பல் தொடர்பான தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றால், அதனைக் கொண்டு, கிடைத்திருக்கும் தாடைப் பகுதி ஷ்ரத்தாவினுடையதுதானா என்பதை காவல்துறையினர் எளிதாகவே உறுதி செய்துவிடலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விசாரணை எப்படி போகிறது?

    காவல்துறை விசாரணை அதிகாரிகள், ஷ்ரத்தா கொலை தொடர்பாக அஃதாபிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் உடனே ஒரு கதையைச் சொல்வது போல பேசத் தொடங்கிவிடுகிறார். எப்படி இவ்வளவு துல்லியமாக இதைச் சொல்கிறாய் என்று அதிகாரிகள் கேட்டால், தான் கைது செய்யப்பட்டது முதல் இதேக் கேள்வியைத்தான் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். பதில் சொல்லி சொல்லி பழகிவிட்டது, எங்கே கண்ணீரும், குற்ற உணர்ச்சியும் வர முடியும் என்று குறிப்பிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால், ஷ்ரத்தாவைக் கொன்றது ஏன் என்பது குறித்த கேள்விக்கும், ஷ்ரத்தாவின் உடல்பாகங்கள் எங்கெங்கு வீசப்பட்டன என்ற கேள்விகளுக்கு மட்டும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பதில்களை அளித்துள்ளார் அஃப்தாப். இதனால் காவல்துறையினர் அஃப்தாப் கூறுவது எதையும் வைத்து ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

    அஃப்தாப்பிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறுகையில், ஷ்ரத்தா மீது இருந்த ஏதோ ஒரு கோபம் அல்லது ஆத்திரம் அல்லது அதிருப்திதான் அஃப்தாபைக் கொலை செய்யத் தூண்டியிருக்கிறது. 

    அவருடன் எடுத்த மிகப்பெரிய புகைப்படங்களையும் அஃப்தாப் எரித்துள்ளார். அந்தக் கோபத்தில்தான், ஷ்ரத்தாவின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையும் தனது கணக்குக்கு மாற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதையும் படிக்க.. 'நான் அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால் அம்மா இப்படி சொல்வார்? ராகுல் பகிர்ந்த ருசிகரம்

    மேலும், தன்னிடமிருந்து ஷ்ரத்தா பணத்தைப் பறித்துக் கொண்டு திருப்பிக் கொடுக்கவில்லை என்றும், அதனால்தான் அவரைக் கொன்ற பிறகு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் அஃப்தாப் கூறியுள்ளார்.

    ஆனால், அஃப்தாப் சொல்லும் எதையும் நம்ப காவல்துறை தயாராக இல்லை. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரைய்ன் மேப்பிங் மற்றும் போலிகிராஃப் சோதனை உள்ளிட்டவற்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுளள்து.

    அஃப்தாப், ஏராளமான டேட்டிங் செயலிகளில் இணைந்திருப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் காவல்துறையினர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp