திகார் சிறை சுற்றுலா தலமா? சத்யேந்தர் ஜெயின் விவகாரத்தில் அறிக்கை கோரும் நீதிமன்றம்
திகார் சிறையில் உள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மசாஜ், வகைவகையான உணவு வகைகளை அனுபவித்து வருவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிறை நிர்வாகத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










