அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியும் தரப்போவதில்லை: சொன்னது யார்?

இன்று ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியையும் நான் தரப்போவதில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

News image

ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியும் தரப்போவதில்லை: சொன்னது யார்?

Updated On :28 நவம்பர் 2022, 4:14 pm IST

இந்தூர்: இன்று ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியையும் நான் தரப்போவதில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே  மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இருவருமே கட்சியின் சொத்துகள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேரள மாநிலம் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல், அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து பிறகு யோசிக்கலாம், தற்போதைக்கு எனது கவனம் முழுக்க இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில்தான் உள்ளது என்றார்.

ராஜஸ்தானில் நிலவும் போட்டி குறித்து கேட்கப்பட்டதற்கு, இது எனது பயணத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சிக்கு இருவருமே சொத்துகள்தான் என்றும் கூறினார்.

மீண்டும் அமேதியில் போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து, இன்று நான் எந்த ஒரு தலைப்புச் செய்தியும் உங்களுக்குத் தரப்போவதில்லை. எனது முழுக் கவனமும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் மீதே உள்ளது. இந்தக் கேள்வி இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் விவகாரம் என்று கூறினார்.

மேலும், வேலைவாய்ப்பின்மை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியாவின் ஒட்டுமொத்த வளமையும், மூன்று அல்லது நான்கு தொழிலதிபர்களின் கைகளில்தான் உள்ளது.  காங்கிரஸ் சிறு தொழில்களை உருவாக்கும் பணியில் கவனம் செலுத்தி, அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.