பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக ஆசிம் முனீர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.
பொதுத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தலைவர் ஆசிம் முனீர், ராணுவத்தின் 17வது தலைமைத் தளபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தானின் தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி கமார் ஜாவேத் பாஜவாவின் பதவிக்காலம் இன்றோடு நிறைவடைகிறது.
இந்த நிலையில், அதிசக்திவாய்ந்த அந்தப் பதவிக்கு ராணுவத்தின் மிக மூத்த அதிகாரியான பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பின் தலைமைத் தளபதி பொறுப்புக்கு ஆசிம் நியமிக்கப்படுவதாக நவம்பர் 24 அன்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.
ஐஎஸ்ஐ மற்றும் எம்ஐ ஆகிய இரண்டு சக்திவாய்ந்த உளவுத்துறை நிறுவனங்களுக்கும் தலைமை தாங்கிய முதல் ராணுவத் தலைவர் இவராவார்.
ஏற்கனவே கடந்த 2018-ல் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதைய பிரதமர் இம்ரான்கானின் வற்புறுத்தலின் பேரில் குறுகிய காலத்திலேயே அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










