நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஐபோன் வாங்கித் தர தாமதம் செய்த பெற்றோர், தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி

மகாராஷ்டிர மாநிலத்தில் பெற்றோர் ஐபோன் வாங்கித் தர தாமதம் செய்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :2 அக்டோபர் 2022, 1:59 pm

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் பெற்றோர் ஐபோன் வாங்கித் தர தாமதம் செய்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: “ தற்கொலை செய்து கொண்ட மாணவி மகாராஷ்டிரத்தின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்சோனி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) தனது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் அந்த மாணவி அவரது பெற்றோரிடம் பலமுறை ஐபோன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளது தெரிய வந்தது. அவரது பெற்றோரும் வாங்கித் தருவதாக கூறி வந்துள்ளனர். இருப்பினும், ஐபோன் வாங்கித் தர தாமதமாகிக் கொண்டே போனதால் அந்த மாணவி இந்த விபரீத முடிவுக்கு வந்துள்ளார்.” என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.