ஜெய்ப்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணி

விஜயதசமியை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தொண்டர்கள் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற 'பாத் சஞ்சலன்' பேரணியில் பங்கேற்றனர்.
ஜெய்ப்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணி
Updated on
1 min read

விஜயதசமியை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தொண்டர்கள் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற 'பாத் சஞ்சலன்' பேரணியில் பங்கேற்றனர்.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் இந்த பேரணி ஜெய்ப்பூரில் உள்ள பார்கோட் உள்பட சுமார் 29 இடங்களில் புதன்கிழமை காலை தொடங்கியது. இந்த பேரணி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு ஆயுத பூஜை வழிபாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சீருடையில் தொண்டர்கள் யோகா, சூரிய நமஸ்காரம் போன்றவற்றின் விளக்கங்களை செய்து காண்பித்தனர். தீவிரவாதம் மற்றும் பிற தேச விரோத சக்திகளை எதிர்கொள்ள ஆர்எஸ்எஸ் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஜெய்ப்பூர் நகரின் வெவ்வேறு பகுதிகளில்  ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பேரணியை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com