கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தனியார் டாக்ஸி செயலிகளுக்கு முற்றுப்புள்ளி: பெங்களூரு ஓட்டுநர்களின் புதிய முயற்சி

தனியார் டாக்ஸி செயலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெங்களூருவில் வாகன ஓட்டுநர்கள் இணைந்து புதிய செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 1:37 pm

DIN

தனியார் டாக்ஸி செயலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெங்களூருவில் வாகன ஓட்டுநர்கள் இணைந்து புதிய செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதிகரித்துவரும் தனியார் வாகனப் பயன்பாடு காரணமாக டாக்ஸி செயலிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சொந்த வாகனங்களை வைத்திருக்கும் ஒட்டுநர்களும் தங்களை தனியார் டாக்ஸி செயலியில் பதிந்து வாகனங்களை இயக்கி வருகின்றனர். குறைந்தபட்ச பயன்பாட்டு உத்தரவாதம், வியாபாரப் போட்டி மற்றும் சம்பளம் காரணமாக தனியார் டாக்ஸி செயலிகள் இத்துறையில் கொடி கட்டிப் பறக்கின்றன.

இந்நிலையில் போதிய வருவாயின்மை காரணமாக பெங்களூரு வாகன ஓட்டுநர்கள் தங்களுக்கென்ற பிரத்யேகமாக வாகன செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். 

பெங்களூரு ஆட்டோ யூனியன் உருவாக்கி வரும் நம்ம யாத்ரி எனும் பெயர் கொண்ட இந்த செயலியானது நவம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. 

தனியார் செயலிகளைப் பொறுத்தவரை ஒரு பயணியிடமிருந்து குறைந்தபட்சம் ரூ.100 பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் ரூ.60 ஓட்டுநர்களுக்கும், ரூ.40 தனியார் செயலிக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். 

இதற்கு மாற்றாக நம்ம யாத்ரி செயலியில் அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் கூடுதலாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்பட உள்ளதாகவும், 2 கி.மீ. தூரத்திற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40 வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கேரள மாநிலத்தில்  மாநில அரசின் சார்பில் சவாரி எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.