மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமால் ஷிண்டேவின் கைப்பேசியைத் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் ஷிண்டே மும்பைக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவரது கைப்பேசியை கௌரவ் என்றவர் திருடியதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஷிண்டே தாதர் ஸ்டேஷனை அடைவதற்கு முன்பு தனது கைபேசியை இருக்கையில் வைத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்றுள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கைபேசியை ஒருவர் திருடியுள்ளார்.
இதையடுத்து, ஷிண்டேவின் மகள் குற்றவாளியை கையும் களவுமாகப் பிடித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மந்தர் பிரமோத் கௌரவ் என அடையாளம் காணப்பட்டு, அரசு ரயில்வே காவல்துறையால் கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சோலாப்பூரில் வசிக்கும் கௌரவ், முன்னாள் முதல்வர் பயணம் செய்த அதே பெட்டியில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.