விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதில் விதிமீறலா? அமைச்சர் விளக்கம்

வாடகைத் தாய் சட்டத்தின்படி, திருமணமான தம்பதி ஐந்து ஆண்டுகள் கழித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :10 அக்டோபர் 2022, 2:44 pm IST

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படும் நிலையில், விதிமுறைப்படி குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டதா? என்று விளக்கம் கேட்கப்படும் என மத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பிறப்பு பற்றி கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றானரா? அதில் விதிமீறல் உள்ளதா? என விளக்கம் கேட்கப்படும் என பதிலளித்தார். 

வாடகைத் தாய் விவகாரத்தில் விதிமீறல் உள்ளதா என்று மருத்துவத் துறை சேவைகள் இயக்குநர் மூலம் விளக்கம் கேட்கப்படும் எனவும் குறிப்பிட்டார். 

வாடகைத் தாய் சட்டத்தின்படி, திருமணமான தம்பதி ஐந்து ஆண்டுகள் கழித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மனைவி 25-50 வயதுக்குள், கணவன் 26-55 வயதுக்குள் இருந்தால், அந்தத் தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற தகுதியானவர்கள் என்று சட்டம் கூறுகிறது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.