நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,139 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 3,208 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 26,292-ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,835- ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | நாசாவின் ‘டார்ட்’ வெற்றி: இனி விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை!
கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.75 சதவிகிதமாக உள்ளது.