அக்.15-ல் எகிப்து பயணம் மேற்கொள்கிறார் ஜெய்சங்கர்!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அக்டோபர் 15-ம் தேதி இரண்டு நாள் பயணமாக எகிப்து நாட்டிற்குப் பயணம் மேற்கொள்கிறார். 
அக்.15-ல் எகிப்து பயணம் மேற்கொள்கிறார் ஜெய்சங்கர்!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அக்டோபர் 15-ம் தேதி இரண்டு நாள் பயணமாக எகிப்து நாட்டிற்குப் பயணம் மேற்கொள்கிறார். 

இந்த பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். இது அவருக்கு முதல் எகிப்து பயணம் ஆகும். 

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எகிப்தில் உள்ள இந்திய சமூகத்துடன் தொடர்புகொள்வதுடன், எகிப்திய மற்றும் இந்திய வர்த்தக சமூகத்தின் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். 

மேலும், ஆப்ரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்களிப்புகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகிறது. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com