தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

சிவப்பு நிற இதயத்தைப் பார்த்தால் வாகனத்தை நிறுத்தவும்.. பெங்களூரு சிக்னல்களில் அதிசயம்

பெங்களூரு நகரத்தின் பல முக்கியப் பகுதிகளில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்களில், சிவப்பு நிற விளக்குகள் இதய வடிவில் மாற்றப்பட்டுள்ளது.

News image

சிவப்பு நிற இதயத்தைப் பார்த்தால் வாகனத்தை நிறுத்தவும்.. பெங்களூரு சிக்னல்களில் அதிசயம்

Updated On :14 அக்டோபர் 2022, 12:44 pm IST

பெங்களூரு நகரத்தின் பல முக்கியப் பகுதிகளில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்களில், சிவப்பு நிற விளக்குகள் இதய வடிவில் மாற்றப்பட்டுள்ளது.

பெங்களூருவில் வாகன ஓட்டிகள் பலரும், சிவப்பு நிற விளக்குகள் இதய வடிவில் மாற்றப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால், சிலர் ஏன் இப்படி இதய வடிவில் சிவப்பு நிற சிக்னல் மாற்றப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து கிடைத்த தகவல் என்னவென்றால், உலக இதய தினத்தை முன்னிட்டு, மணிப்பால் மருத்துவமனை, பெங்களூரு மாநகராட்சி மற்றும் பெங்களூரு போக்குவரத்துக் காவல்துறையுடன் இணைந்து இதுவரை 15 சிக்னல்களில் இருக்கும் சிவப்பு விளக்குகளை மாற்றிவிட்டு இதயவடிவிலான விளக்குகளை பொருத்தியுள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் டிவிட்டர் பக்கத்திலும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. வெறும் சிவப்பு நிறத்தை இதய வடிவில் மாற்றியதோடு மட்டுமல்ல, சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் பயனடையும் வகையில் இதய நலன் குறித்த தகவல்களையும், ஒலிப்பெருக்கி வாயிலாக பகிர்ந்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.