Enable Javscript for better performance
Be it Ram temple or Article 370, Modi govt made possible what had seemed impossible: Shah .- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முடியாது என்பதை முடித்து காட்டியது மோடி அரசு, அது ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தோ அல்லது ராமர் கோயிலோ: அமித் ஷா

    By DIN  |   Published On : 15th October 2022 06:02 PM  |   Last Updated : 15th October 2022 06:02 PM  |  அ+அ அ-  |  

    Amit Shah

    முடியவே முடியாது எனக் கூறும் விஷயங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடித்துக் காட்டியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது போன்றன மோடி தலைமையிலான அரசினால் சாத்தியமாகியுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ஹிமாசலப் பிரதேசத்தில் தேர்தல் தொடர்பான பேரணி ஒன்றில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தெரிவித்தார்.

    இதையும் படிக்க: 6 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

    பேரணியில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:  மோடி தலைமையிலான அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ல் நீக்கியது. நீங்கள் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என்று என்றாவது நினைத்திருக்கிறீர்களா? காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 அப்போதைய பிரதமர் நேருவினால் கொண்டு வரப்பட்டதால் இந்த விஷயத்தில் மௌனமாக மட்டுமே இந்துள்ளது. அதேபோல அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்திலும் மோடி தலைமையிலான அரசு வெற்றி பெற்று ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டப்பிரிவு 370 ஆக இருந்தாலும் சரி அல்லது ராமர் கோயில் கட்டுவதாக இருந்தாலும் சரி முடியாது என இருந்ததை மோடி தலைமையிலான அரசு சாத்தியமாக்கியுள்ளது என்றார்.

    ஹிமாசலப் பிரதேசத்தில் வருகிற நவம்பர் 12 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp