பிகார் முதல்வர் நிதீஷ் சென்ற படகு விபத்தில் சிக்கியது?

பிகார் முதல்வர் நிதீஷ் சென்ற படகு விபத்தில் சிக்கியது?

கங்கை நதியில் ஆய்வு செய்ய சென்ற பிகார் முதல்வர்  நிதீஷ் பயணித்த படகு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
Published on


பாட்னா: கங்கை நதியில் ஆய்வு செய்ய சென்ற பிகார் முதல்வர்  நிதீஷ் பயணித்த படகு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பாட்னா அருகே கங்கை நதியில் கொண்டாடப்படவிருக்கும் சாத் பூஜையை முன்னிட்டு, நேரில் ஆய்வு செய்ய பிகார் முதல்வர் நிதீஷ்குமார் சென்ற படகு எதிர்பாராத வகையில், ஜேபி சேது பாலத்தின் தூண் மீது மோதியது.

நல்வாய்ப்பாக, படகில் இருந்த முதல்வர் நிதீஷ்குமார் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாத் பூஜையை முன்னிட்டு கங்கை நதியை சுத்தமாக வைக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து நிதீஷ்குமார் ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com