குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவில் 47 பேர்: சசிதரூருக்கு இடமில்லை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதிய வழிகாட்டுதல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :27 அக்டோபர் 2022, 4:47 am IST

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதிய வழிகாட்டுதல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் விவகாரங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.

அதில், சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே. அந்தோனி, ப.சிதம்பரம் உள்பட 47 பேருக்கு வழிகாட்டுதல் குழுவில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெறவில்லை.

மேலும், பிரியங்கா காந்தி, ஏ.கே. ஆண்டனி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கார்கே அமைத்துள்ள வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், ஏ.செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று காலை பொறுப்பேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.