பஞ்சாப் சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று காணப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ஆளில்லா விமானம் பாகிஸ்தானுக்குத் திரும்பியது.
முன்னதாக, அக்.27-ம் தேதி இரவு பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மீட்டனர்.
மேலும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில், ஒரு பையும், அதில் ஆறு ஏகே-47 ரக துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.