ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

இந்தியாவில் 21.4 லட்சம் பேருக்கு காச நோய்: உலக சுகாதார மையம்!

கரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் 21.4 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :30 அக்டோபர் 2022, 7:10 pm IST


கரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் 21.4 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைத்த கரோனா பெருந்தொற்று 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. 

இந்நிலையில், கரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் 21.4 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார மையத்தின் சர்வதேச காச நோய் பிரிவு தெரிவித்துள்ளது. 

உலக முழுவதும் கரோனாவுக்கு 65 லட்சம் பேர் பலியாகினர். அவர்களில் இந்தியாவில் மட்டும் 5.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாக்கம் வேறு நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, அடங்கியிருந்த காச நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 

கடந்த 2021 இல் நாட்டில் 22 கோடிக்கும் அதிகமானோருக்கு காச நோய் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 21.4 லட்சம் பேருக்கு காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. "2021 இல் 1 லட்சம் பேரில் 210 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது கடந்த 2020 ஆம் ஆண்டின் பாதிப்பை விட 18 சதவீதம் அதிகம். இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்தியா 36 ஆவது இடத்தில் உள்ளது. 

உலக அளவில் 28 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இந்தியா உள்பட 8 நாடுகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.